The winning entry has been announced in this pair.There were 3 entries submitted in this pair during the submission phase. The winning entry was determined based on finals round voting by peers.Competition in this pair is now closed. |
பல ஆண்டுகளாக காலப்போக்கில், அதைப் பற்றிய எந்த பரபரப்பும் இல்லாமல், நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் நகரின் பாதசாரிகள் கடக்கும் விளக்குகளை இயக்கும் கட்டுப்பாட்டு பொத்தான்களில் பெரும்பாலானவற்றை முடக்கியுள்ளனர். கணினிமயமாக்கப்பட்ட குறித்த காலமுடுக்கிகள் (டைமர்கள்) கிட்டத்தட்ட எப்போதும் சிறப்பாக வேலை செய்ததாக அவர்கள் முடிவு செய்தனர். 2004 ஆண்டு வாக்கில், அத்தகைய 3,250 பொத்தான்களில் 750க்கும் குறைவானதே செயல்பட்டது. எண்ணற்ற விரல்கள் வீணாக அழுத்திய போதிலும் அரசாங்கம் முடக்கப்பட்ட பொத்தான்களை மாற்றவில்லை. தொடக்கத்தில், பொத்தான்களை அகற்றுவதற்கான செலவு காரணமாக அவை அப்படியே இருந்தன. ஆனால், இயங்காத பொத்தான்கள் கூட ஒரு நோக்கத்திற்கு உதவுவது தெரியவந்தது. பொத்தானை அழுத்தும் பாதசாரிகள் பச்சை மனிதன் தோன்றும் முன்பே கடக்கும் சாத்தியம் குறைவாக இருந்ததாக இஸ்ரேலின் நெகேவின் பென்-குரியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தல் ஓரான்-கிலாத் சொல்கிறார். கடக்குமிடங்களில் நடத்தைகளை படித்த பின், மக்கள் தங்கள் உள்ளீட்டை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் ஒரு அமைப்புக்கு உடனடியாகக் கீழ்ப்படிகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். செயலற்ற பொத்தான்கள் இந்த வகையான போலி மருந்துப்போக்கு விளைவுகளை உறுவாக்குகிறது, ஏனெனில் பயன்படுத்தும் அமைப்புகளின் கட்டுப்பாட்டைப் பெற்ற உணர்வை மக்கள் விரும்புகிறார்கள் என அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மனித-கணினி தொடர்பு வல்லுநரான எய்டன் அடார் சொல்கிறார். டாக்டர் அடார் தன்னுடைய மாணவர்கள் பொதுவாக ஒரு சொடுக்கி "சேமி" என்ற பொத்தானைக் கொண்டுதான் மென்பொருள் வடிவமைக்கிறான் என்று குறிப்பிடுகிறார். மேலும, தங்கள் விசைகளை எப்படியும் தானாகவே சேமித்துவைப்பதை அறியாமலேயே இருக்கும் பயனர்களுக்கு உத்திரவாதத்தை தருவதை தவிர பொத்தானுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லை. இந்த நவீன உலகில் இயற்கையாக ஒத்துழைக்காததை எதிர்ப்பதற்கு கருணை கலந்த போலியான தொடுதலை பற்றி யோசித்துப் பாருங்கள் என அவர் சொல்கிறார். அது ஒரு பார்வை. ஆனால், குறுக்கு சாலைகளில், போலி மருந்துப்போக்கு பொத்தான்கள் ஒரு இருண்ட பக்கமாக குறைந்தபட்சம் இருக்கலாம். போக்குவரத்து அமைப்புகளில் உளவியல் காரணிகளை ஆராய்ந்து வருகின்ற வியன்னாஸ் நிறுவனத்தின், பாக்ட்டும் (FACTUM) இன் தலைவர் ரால்ஃப் ரிஸர், தங்கள் இருப்பைப் பற்றி பாதசாரிகளின் விழிப்புணர்வு மற்றும் ஏமாற்றுவதில் விளைவாக கோபம் அடைவது ஆகியவை இப்போது நன்மைகளை விட அதிகமாக உள்ளது. | Entry #25417 — Discuss 0 — Variant: Not specified Winner
|
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நியூ யார்க்கின் அதிகாரக்குழு நகரத்தில் முன்பு இயங்கி கொண்டிருந்த பாதசாரிகளுக்கான சமிக்ஞை விளக்குகளை இயக்கும் பெரும்பாலான கட்டுப்பாட்டு விசைகளை எந்தவித பரபரப்புமின்றி முடக்கியுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட கால பதிவு கருவிகள், மேலும் நன்கு செயல்படுவதாக அவர்கள் முடிவெடுத்துள்ளனர். 2004-ஆம் ஆண்டளவில், 3,250 விசைகளில் 750-க்கும் குறைவானவை செயல்பாட்டில் இருந்தன. எனினும், நகர அரசாங்கம், முடக்கப்பட்ட விசைகளை அகற்றவில்லை. இது வீணாக விசைகளை அழுத்துபவர்களுக்குத் தூண்டுதலாகிவிட்டது. ஆரம்பத்தில், விசைகளை அகற்றும் செலவைக் கருத்தில் கொண்டு விசைகள் அப்படியே விடப்பட்டன. ஆனால், செயலிழந்த விசைகளும் கூட ஒரு நோக்கத்திற்காக உதவுகின்றன. விசையை அழுத்தும் பாதசாரிகள் சமிக்ஞையில் பச்சை மனிதன் தோன்றும் முன்னரே கடப்பது குறைவு என்று இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென்-குரியோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தல் ஓரோன்-கிலாட் கூறுகிறார். சாலையைக் கடப்பவர்களின் நடத்தையைக் கற்ற அவர், மக்கள் தங்களின் உள்ளீட்டை கவனிக்க, உடனடியாக விதிகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். செயலற்ற விசைகள் இந்த வகையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் மக்கள் அவர்கள் பயன்படுத்தும் அமைப்புமுறைகளின் மீது ஒரு கட்டுப்பாட்டு உணர்வைக் கொள்ள விரும்புவர், என அன் ஆர்பரிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனித-கணினி தொடர்பு நிபுணர் எய்தன் அடர் கூறுகிறார். டாக்டர் அடர் அவரது மாணவர்கள், எளிமையாக சொடுக்கக்கூடிய "பதிவு" விசையுடன் வழக்கமாக பென்பொருளை வடிவமைப்பதைக் கவனித்துள்ளார். அவர்களது பதிவுகள் தானாகவே சேர்த்துவைக்கப்படுவதை அறியாதிருக்கும் பயன்பாட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதைத் தவிர அந்த "பதிவு" விசைக்கு வேறு பங்கு இல்லை. இயந்திர உலகில் தானாக அமைந்த இடைவெளியை எதிர்கொள்ள ஒரு உண்மையற்ற மனிதாபிமனத்தின் வெளிப்பாடாக இதை எண்ணிப் பாருங்கள் என்கிறார் அவர். அது ஒருவகை நோக்குநிலை. ஆனால், சாலைக் கடப்புகளில், போலி விசைகள் எதிர்மறையான பக்கத்தையும் கொண்டிருக்கலாம். பாதசாரிகளுக்குத் தங்களது இருப்பைப் பற்றிய விழிப்புணர்வும், ஏமாற்றத்தில் விளைந்த சீற்றமும், இப்போது கூடுதலான நன்மைகளை அளித்துள்ளது என போக்குவரத்து அமைப்பில் உளவியல் காரணிகளை ஆராயும் வியன்னீஸ் கல்வி அமைப்பான FACTUM-இன் தலைவர் ரால்ஃப் ரைசர் மதிப்பிட்டுள்ளார். | Entry #25628 — Discuss 0 — Variant: Not specified
|
நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் ஒரு முறை பயன்படுத்தும் நகரில் பாதசாரி கடந்து செல்லும் விளக்குகள் இயக்கப்படும் கட்டுப்பாட்டு பொத்தான்களில் பெரும்பாலானவற்றை அதை பற்றி எந்த பெரிய அமளி ஏதுமின்றி பல வருடங்களாக முடக்கினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் நன்றாக வேலை செய்யும் கணினி டைமர்களை பொருத்த முடிவு செய்தனர், 2004 ஆம் ஆண்டளவில், அத்தகைய 3,250 பொத்தான்களில் 750 க்கும் குறைவாக செயல்பட்டது. நகர அரசாங்கம் பழுதான பொத்தான்களை அப்புறப் படுத்தாததால், எண்ணற்ற விரல்கள் பயனற்ற அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தன. அவற்றை அகற்றுவதற்கான செலவு கூடுதலாக இருந்ததால் ஆரம்பத்தில், பொத்தான்கள் பிழைத்துவிட்டன ஆனால், செயலற்ற பொத்தான்கள் கூட ஒரு நோக்கத்திற்காக உதவுகின்றன. ஒரு பொத்தானை அழுத்திய பின், பச்சை மனிதன் தோன்றும் முன் கடக்க முயலும் பாதசாரிகள் குறைவாகவே இருக்கின்றனர் என்கிறார் இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டால் ஓரான்-கிலாட். அவர் சாலையை கடக்கும் முறைகளைப் பற்றி படித்த பிறகு, மக்கள் தங்கள் உள்ளீட்டை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் ஒரு முறையை மக்கள் உடனடியாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். செயல்படாத பொத்தான்கள் இந்த வகையான மனவியல் ரீதியான நல்விளைவுகளை உற்பத்தி செய்கின்றன. மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் அன் ஆர்பரில் மனித-கணினி தொடர்பில் வல்லுநரான ஐடென் அடார் தன்னுடைய மாணவர்கள் பொதுவாக மென்பொருளை எழுதும் போது, ஒரு சொடுக்கியை "சேமி" என்ற பொத்தானைக் கொண்டு வடிவமைக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார், அந்த பயனர்கள் தங்களின் உள்ளீடுகள் தானாகவே சேமிக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது கூறுகிறார். அதை மனதில் வைத்து, இயந்திர உலகின் மீதுள்ள உள்ளார்ந்த பயத்தை எதிர்ப்பதற்கு ஒரு தொடுதல் கருணை மயக்கம் என, டாக்டர் அடார் கூறுகிறார். அது ஒரு பார்வை. ஆனால், சாலையைக் கடக்கும் விஷயத்தில் குறைந்தபட்சம், போலி பொத்தான்களுக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கலாம். ரால்ஃப் ரிஸர், போக்குவரத்து அமைப்புகளில் உளவியல் காரணிகளைப் படிக்கும் ஒரு வியன்னாவின் நிறுவனமான FACTUM இன் தலைவர், பாதசாரிகள் தங்கள் இருப்பின் விழிப்புணர்வை கணக்கிடுகிவது வஞ்சகத்தின் விளைவாக என்று தெரியும் போது அது நன்மையை விட தீமை அதிகமாக உள்ளது என மாற்றுக் கருத்தை முன் வைக்கிறார். | Entry #25082 — Discuss 0 — Variant: Not specified
|